இந்தியாவில் உள்ள மூன்று ரயில்வே மண்டலங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

மேற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே மற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் சுமார் 995 பேர் மது அருந்தி இருந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தரவுகள் மூலம் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக டெல்லியில் 471 ஓட்டுனர்கள் மது அருந்தி இருந்ததாகவும் அதில் 181 பேர் பயணிகள் ரயில் இயக்குபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அதில் பணி முடிந்து ரயிலை விட்டு இறங்கிய ஓட்டுநர்கள் 189 பேர் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் 104 ஓட்டுநர்கள் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதில் 41 பேர் பயணிகள் ரயில்களை இயக்குபவர்கள் தகவலும் வெளியாகியுள்ளது.

995 ஓட்டுநர்களில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டுனர்கள் பணி நேரத்தில் மது அருந்தியிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.