ரக்கோணம்

வடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாகி உள்ளது.

நேற்று சென்னை சென்டிரல் – அரக்கோணம் ரயில் மார்கத்தில் உள்ள ஆவடி ரயில் நிலையத்திற்கு அண்ணனூர் பணிமனையில் இருந்து வந்த புறநகர் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  அப்போது ரயிலில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் இந்த விபத்தில் காயம் உண்டாகவில்லை.

ஆயினு, சென்னையில் இருந்து மைசூர் மற்றும் விஜயவாடா செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை- கோவை எக்ஸ்பிரஸ், சென்னை-திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ், சென்னை- பெங்களூரூ டபுள் ெடக்கர் எக்ஸ்பிரஸ், சென்னை- பெங்களூரூ பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ், சென்னை- அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் வரை செல்லும் 5 புறநகர் ரயில்களும் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டன.

அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக அரக்கோணத்தில் இருந்து சென்றது. பயணிகள் இதனால் கடும் அவதிக்குள்ளானர்.