கடலூர்

ஹமூன் புயலுக்காக கடலூர் துறைமுகத்தில் 2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. \ ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவில் இது மையம் கொண்டிருந்தது.

இது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஹாமுன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  ஹமூன் புயல் தற்போது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

ஹமூன் புயல் வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று புதன்கிழமை) வங்காள தேசம் நாட்டில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால்  கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகி உள்ளதை 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு குறிப்பதாகும்.