வேலூர்:
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சு விரட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
வேலூர் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியின்போது, அஜித் ரசிகரின் ‘வில்லன்’ காளை, மற்றொரு காளை மோதியதில் பரிதாபமாக இறந்தது.
வேலூர் மாவட்டம் மூச்சூர்பட்டு கிராமத்தில் பால்காரராக பணி செய்து வருபவர் மணி. அஜித் ரசிகரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த காளையை வாங்கியுள்ளார். தனக்குப் பிடித்த நடிகர் அஜித் படமான வில்லன் படத்தின் பெயரையே காளைக்குச் சூட்டி வளர்ந்து வந்துள்ளார். ஆண்டு தோறும் மஞ்சு விரட்டில் கலந்துகொண்டு கலக்குவது வில்லனின் வாடிக்கை. இதற்காக வில்லனுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
நேற்று நடைபெற்ற மஞ்சு விரட்டு விளையாட்டின்போது, ‘வில்லன்’ காளை, அதை விரட்டிய ரசிகர்களை மிரட்டி வந்தது. ரசிகர்கள் தொடர்ந்து விரட்டியதால், முன்னால் ஓடிய காளை மீண்டும் திரும்பி வந்து, தன்னை விரட்டியவர்களை மிரட்டியது.
அந்த வேளையில், மற்றொரு காளை மஞ்சு விரட்டுக்காக, திறந்து விட்டப்பட்ட நிலையில், மக்கள் கூட்டத்தை பார்த்து பயந்து வேகமாக ஓடி வந்த காளை, எதிரே வந்த ‘வில்லன்’ காளை மீது பயங்கரமாக மோதியது.
இதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட வில்லன் காளையின் கொம்பு முறிந்த நிலையில், உயிருக்கு போராடியது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட வில்லன் காளை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
வில்லன் காளைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், வில்லன் உயிரிழந்துவிட்டதை அறிவிக்க இரண்டு பெரிய டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார் மணி.
தன்னை விரட்டி வந்த காளையர்களை மிரட்டிய ‘வில்லன்’ காளை, வில்லன் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘வில்லன்’ காளை மிரட்டும் வீடியோ…..