சென்னை

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி ஆர் பாலு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரலில் திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி, அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள். டி.ஆா்.பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், கதிா் ஆனந்த், முதல்வரின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை வெளியிட்டார்.

இவ்வாறு அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  திமுக அமைப்புச் செயலர் ஆா்.எஸ்.பாரதி, தவறான தகவல் வெளியிட்டதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.  இதைப்போல், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை அவதூறு தகவல்களை வெளியிட்டு, தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள்களுக்கு முன்பு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்..

முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு, அண்ணாமலை மீது   சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்  .  தன்னை பற்றி தவறான தகவல்களை   எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை வெளியிட்டு, தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், நோட்டீஸ் அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17 ஆவது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.