சென்னை

த்தி வைக்கப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே 15 முதல் தொடங்க உள்ளது.

இந்த மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் நடைபெறுவதாக இருந்தது. திடீரென நிர்வாக காரணங்களுக்காகக் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது. அந்த  ஆசிரியர் கலந்தாய்வு வருகிற 15ம் தேதி துவங்குவதாக இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வரும் 15 ஆம் தேதி அன்று மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு  நடைபெறுகிறது.  அன்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதைப்போல் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) கலந்தாய்வும் 15 ஆம்தேதியும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 16 ஆம் தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாறுதல்) 16 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.