நாகர்கோவில்: குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் பாறைக்க அருகே  133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மறைந்த கருணாநிதியால் கடந்த  2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விவகானந்தர் பாறையை பார்வையிட செல்லும் சுற்றுலா படகுகள் மூலம் விவேகானந்தர் பாறையையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வந்தனர்.

கடலின் நடுவே  திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால், அது  உப்புக்காற்று, மழை, வெயில் போன்றவற்றால் சிலை பாதிக்கப்படும் என்பதால் நான்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலை சுத்தம் செய்யப்பட்டு ராசயன கலவை பூசப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட பின்னர் 5 ஆவது முறையாக சுமார் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில்  ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. எனவே சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு அனுமதிக்கப்படவில்லை.  கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வந்த ரசாயன கலவை பூசும் பணி நிறைவந்ததை அடுத்து புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும் திருவள்ளுவர் சிலையை  இன்று (மார்ச் 6) முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.