மலப்புரம்:
கேரள மாநிலம் மலப்புரம் அருகே 2 அடுக்கு சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தாநூர் தூவல் தீறம் பூங்காவில் சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் 30 பேர் பயணம் செய்த நிலையில் குழந்தை உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்