சென்னை
நாளை பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது/
விரைவில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த மாதம் 20ம் தேதி இந்த வழித்தடத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இத்தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி – முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கி சோதனை வெற்றியடைந்தது.
நாளை பூந்தமல்லி – போரூர் தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. சுமார் .1 கி.மீ தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் மொத்தம் 10 ரெயில் நிலையங்கள் உள்ளன. பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவையை டிசம்பர் மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.