சென்னை

சென்னையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

இன்று சென்னை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”பிரதமர் மோடி நாளை (4.03.2024) அன்று மாலை 5.00 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறும் “தாமரை மாநாடு” பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் இடம் மற்றும் அதைச் சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை. மவுண்ட் பூந்தமல்லி சாலை. சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடிச் சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளைத் தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் தடை செய்யப்படும் சாலைகளின் விவரம்:-

* மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை

* இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு

* மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை.

* அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு

* விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி)

* அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை

* தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை.”

என்று கூறப்பட்டுள்ளது.