புனே: இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது.

புனேயிலுள்ள, அதே மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில், கடந்த போட்டியைப் போலவே, பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

முதல் ஒருநாள் போட்டியை அபாரமாக வென்ற இந்தியா, இரண்டாவது போட்டியையும் வென்று, தொடரைக் கைப்பற்ற ஆவலாய் இருக்கிறது. இந்திய அணியின் ஆட்டத்திறனை பார்த்து, பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் போன்றவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

இந்திய அணியில், வேலைக்கு ஆகாத குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வேறு யாருக்கேனும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யஸ்வேந்திர சஹலுக்கான வாய்ப்பு அதிகமிருக்கலாம். ரிஷப் பன்ட் மீண்டும் உள்ளே வருவாரா? அல்லது கேஎல் ராகுலே தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.