ழனி

நாளை பராமரிப்பு பணி காரணமாக பழனிமலை முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இயங்காது.

அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன.

இவற்றில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால்  பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது. பழனிமலை ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த நேரத்தில் ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.

நாளை  பழனிமலை ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி ரோப்கார் சேவை அன்று ஒருநாள் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே பழனிக்கு வரும் பக்தர்கள் படி பாதை வழியாக அல்லது மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் சென்று முருகனைத் தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.