சென்னை

சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

தற்போது சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது.  அதைக் குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் எளிதாகப் பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ஒரு புதிய பேர்ந்து நிலைய அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையம் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ம் கட்டப்பட்டுள்ளது.  கடந்த 12 ஆம் தேதி இந்த பேருந்து நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

நாளை காலை 11 மணிக்கு கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலந்தூர் முதல் வண்டலூர் வரை உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.