டில்லி

ரும் டிசம்பர் 4 அன்று தொடங்க உள்ள மழைக்கால நாடாளுமன்ற தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது,

கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. பிறகு கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நடைபெற்று தேதி குறிப்பிடப்படாமல், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 4-ந்தேதி தொடங்குகி 19 நாட்கள் நடைபெறுகிறது.  இந்த தொடரில் 15 அமர்வுகளுக்குத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் 18 மசோதாக்கள் உள்பட முக்கிய அலுவல்களை இந்த தொடரில் மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக்கட்சிகளின் ஆதரவையும் அரசு நாடியுள்ளது. இதைப் பற்றி விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றுக்கு அரசு அழைப்பு விடுத்திருந்தது.

நாளை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நடத்தும் இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில்  நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.