போபால்

த்தியப்  பிரதேச மாநிலத்தில் இருந்து 5 லட்சம்  லட்டுகள் நாளை ராமர் கோவில் குடமுழுக்கையொட்டி அயோத்திக்கு அனுப்பப்படுகின்றன  

 

வரும் 22 ஆம் தேதி அன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அம்மாநில அரசு  இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அயோத்திக்கு உஜ்ஜைனியின் மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து 5 லட்சம் லட்டுகளைப் பிரசாதமாக அனுப்ப உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ  ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மகாலேஷ்வர் கோவில் உதவி நிர்வாகி மூல்சந்த் ஜூன் வால்

நேற்று மாலை 4 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் இருந்தது. ஒரு லட்சம் லட்டுகள் இன்று தயார் செய்யப்படுகிறது. அந்த லட்டுகள் அனைத்தும் நாளை 3 முதல் 4 லாரிகளில் மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து அயோத்திக்கு அனுப்பப்பட உள்ளது. 

லட்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 50 கிராம் எடையுள்ளதாகவும், மொத்த 250 குவிண்டால் எடை இருக்கும்.  900 கி.மீ தொலைவில் உள்ள அயோத்திக்குப் பாபா மகாகாள் பிரசாதமாக அனுப்பப்படும், இந்த லட்டுகளை ஐந்து நாட்களில் 150 கோவில் பணியாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தயார் செய்ததுள்ளனர்” 

என்று தெரிவித்துள்ளார்.