சென்னை

மிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர்.

இவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர்.

பல்வேறு காரணங்களால் சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.