சென்னை: நாளை (ஜன.18) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 18ந்தேதி விடுமுறை என பரவலாக சமுக ஊடங்களில் செய்திகள் பரவிய நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுஅலுவலகங்ளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும்  14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை  விடுமுறை அளிக்கப்பட்டடு இருந்தது.  இந்த நிலையில், வெளியூர் சென்றவர்கள், திரும்பும் வகையில், 18ந்தேதி (நாளை) விடுமுறை   அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், நாளை விடுமுறை என்ற வதந்தியான செய்திகளும் சமுக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து  நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இதனால் 18ந்தேதி பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குவது உறுதியனது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து, நாளை (ஜன.18) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.