டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த  11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஹாங்காங் வீராங்கனை நான் யி செங் ஆகிய இருவரும் மோதினர். இந்த போட்டியில் 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி பி . வி . சிந்து வெற்றிப் பெற்றுள்ளார்.

குரூப் ‘ ஜே ‘ பிரிவில் முதலிடம் பிடித்து பி . வி . சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . சிந்துவுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.