டொக்கியோ:  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி  போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
ஒலிம்பிக் இன்று நடைபெற்ற  பூல் ஏ மகளிர் ஹாக்கி போட்டியில் தென்னாப்பிரிகாகை இந்திய அணி எதிர்கொண்டது. இதில் இரு அணிகளும் ஆவேசமாக போட்டிப்போட்டு ஆடி வந்தனர். போட்டி விறுவிறுப்பாக இருந்த நிலையில், 4-3 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் வந்தனா கட்டாரியா மூன்று கோல்கள் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் தனது காலிறுதி தகுதியை தக்க வைத்துள்ளது.
முன்னதாக   அயர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது. 4வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
அதுபோல ஆடவர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில், இந்தியா 2 கோல்களும் ஜப்பான் 1 கோலும் அடித்தன. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில், ஜப்பான் தரப்பில் 2 கோல் அடிக்கப்பட,  இந்தியா மேலும் 3 கோல் அடித்து அசத்தியது.
இதனால், ஆட்ட நேர முடிவில் 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கமல்பிரீத் கவுர் பெண்கள் டிஸ்கஸ் த்ரோ இறுதிப் போட்டிக்கு 64.00 எறிதலுடன் தகுதிபெற்றபோது தகுதி பெற்றார். மறுபுறம், சீமா புனியா தகுதிபெறத் தவறிவிட்டார், மேலும் தகுதியின் போது 60.57 தனது சிறந்த முயற்சியாக பதிவு செய்தார். மேலும், உலகின் நம்பர் ஒன் அமித் பங்கால் 16 வது சுற்றில் ஆரம்பத்தில் வெளியேறினார்,
ஆண்கள் குத்துச்சண்டை பறக்கும் (48-52 கிலோ) பிரிவில் யூபர்ஜென் மார்டினெஸிடம் தோற்றார். பங்கலைத் தவிர, வில்வித்தை வீரர் அதனு தாஸ் ஜப்பானின் தகாஹரு ஃபுருகாவாவிடம் ஆண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷனில் தோற்றார்.
ஆண்கள் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே ரவுண்ட் 3 ல் பங்கேற்று அனிர்பன் லஹிரி தற்போது செயல்பட்டு வருகிறார்.
துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் தேஜஸ்வினி சாவந்த் மற்றும் அஞ்சும் மவுட்கில் ஆகியோர் பெண்கள் 50 மீ ரைபிள் 3 நிலைகள் தகுதிப் போட்டியில் போட்டியிடுகின்றனர்.
பிவி சிந்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் உலக நம்பர் 1 தாய் சூ-யிங்கை எதிர்கொள்ளும் போது இந்தியாவின் அட்டவணையில் தலைமை வகிப்பார்.