சென்னை

ன்று  இளங்கலை மருத்துவப்படிப்புக்கான பொதுப்பிரிவு.கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.  மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த வாரம் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

கடந்த 20 ஆம் தேதி முதல் அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று காலை 10 மணி முதல் வருகிற 31ந்தேதி வரை 7 நாட்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இன்று முதல் பொதுப்பிரிவினருக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற  உள்ளது  இந்த் கலந்தாய்வுக்குத் தரவரிசை பட்டியலில் 25,856 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதன் முடிவுகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

வரும் 27 ஆம் தேதி சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.