சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 439 பேரும் கோவையில் 891 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 7,427 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,29,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 31,386 பேர் உயிர் இழந்து 23,37,209 பேர் குணம் அடைந்து தற்போது 61,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,29,650 பேர் பாதிக்கப்பட்டு 8,071 பேர் உயிர் இழந்து 5,20,236 பேர் குணம் அடைந்து தற்போது 1,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 891 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 795 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,13,384 பேர் பாதிக்கப்பட்டு 1,911 பேர் உயிர் இழந்து 2,01,907 பேர் குணம் அடைந்து தற்போது 9,566 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,54,428 பேர் பாதிக்கப்பட்டு 2,317 பேர் உயிர் இழந்து 1,50,202 பேர் குணம் அடைந்து தற்போது 1,909 பேர் சிகிச்சையில் உள்ளனர்.