சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 165 பேரும் கோவையில் 229 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,592 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,22,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,018 பேர் உயிர் இழந்து 25,71,378 பேர் குணம் அடைந்து தற்போது 16,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,44,983 பேர் பாதிக்கப்பட்டு 8,410 பேர் உயிர் இழந்து 5,34,828 பேர் குணம் அடைந்து தற்போது 1,745 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 229 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,37,203 பேர் பாதிக்கப்பட்டு 2,280 பேர் உயிர் இழந்து 2,32,712 பேர் குணம் அடைந்து தற்போது 2,211 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,65,904 பேர் பாதிக்கப்பட்டு 2,433 பேர் உயிர் இழந்து 1,62,391 பேர் குணம் அடைந்து தற்போது 1,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.