சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 372 பேரும் கோவையில் 756 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 6,162 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,49,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 31,901 பேர் உயிர் இழந்து 23,67,831 பேர் குணம் அடைந்து தற்போது 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,30,789 பேர் பாதிக்கப்பட்டு 8,131 பேர் உயிர் இழந்து 5,19,128 பேர் குணம் அடைந்து தற்போது 3,530 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 756 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 641 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,15,808 பேர் பாதிக்கப்பட்டு 1,968 பேர் உயிர் இழந்து 2,06,592 பேர் குணம் அடைந்து தற்போது 7,248 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,55,325 பேர் பாதிக்கப்பட்டு 2,331 பேர் உயிர் இழந்து 1,50,836 பேர் குணம் அடைந்து தற்போது 2,158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.