சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த,தமிழக மாவடங்களை 3 வகைகளாகப் பிரித்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கு வருகிற 28-ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது.  தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இவ்வாறு கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா? மற்றும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விவாதிக்க உள்ளார்.

தவிர, கொரோனா 3-வது அலையைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.