டில்லி

ன்று இன்று மகாராஷ்டிராவில் 4981 பேர், கேரளாவில் 4875, மற்றும் டில்லியில் 1,674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 4,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,64,348 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 75 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 47,902 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 5,111 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 17,42,191 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 73,166 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 4,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,49,572 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 2508 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,647 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,86,998 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,941 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 2,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 5,99,575 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 50 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,813 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 4,177 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,69,216 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 20,546 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.