ராய்ப்பூர்

ன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார்.

கடந்த மாதம் சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்று மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 54 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது. அதே வேளையில் காங்கிரஸ் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

பாஜக அம்மாநில முதல்வரை தேர்வு செய்யும் நடவடிக்கையைத் தொடங்கிக் கடந்த ஞாயிறு ராய்ப்பூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக தலைமை அறிவித்தது.

சத்தீஸ்கரில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளதால், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துப்படி விஷ்ணு தியோ முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இன்று, சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றார். அதையொட்டி ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஷ்ணு தியோ சாய் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார்.

முதல்வருக்கு சத்தீஸ்கர் மாநில ஆளுநர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும்  மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.