பரிமலை

பரிமலை ஐயப்பன் கோவில் புரட்டாசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இன்றுபுரட்டாசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

இதையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.  தற்போது கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை செயலருக்கு தேவசம்போர்டு ஆணையருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.