வாரணாசி

ன்று பிரதமர் மோடி வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

இன்று பிரதமர் மோடி, தான் போட்டியிட்டு ஜெயித்த வாரணாசி தொகுதியில், விளையாட்டு பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகச் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.  இதையொட்டி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.121 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்து உள்ளார்.

அங்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.330 கோடியில் சர்வதேச தரத்துடன் பிரமாண்ட விளையாட்டரங்கத்தை நிறுவ உள்ளது. இந்த விளையாட்டரங்கம் வாரணாசியின் ராஜதலா பகுதியில் உள்ள கஞ்சாரி கிராமத்தில் அமைகிறது. இதை 30 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இங்கு 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும். இன்றைய அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்து கொள்கிறார்கள்.

இன்று  பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் ரூ.1,115 கோடியில் கட்டப்பட்டுள்ள 16 பள்ளிகளையும்திறந்து வைக்கிறார். இன்று அவர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், கலாச்சார விழாவின் நிறைவு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். வாரணாசியில் பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.