டில்லி

ருவர் இன்ஸ்டாகிராமில் தனது தற்கொலை முயற்சியை லைவாக பதிவிட்டதால் அந்த முயற்சியை காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளது.

டில்லியின் ஷாரதா பகுதியை சேர்ந்த 28 வயது நபருக்கு மனைவியுடன், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்த நபரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். எனவே அந்த நபர் மட்டும் வீட்டில் தனியே வாழ்ந்து வந்தார்.

தனது மனைவி பிரிந்து சென்றதால் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்ட அந்த நபர் நேற்று தன் வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். அவர் கத்தியால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி இது தொடர்பாகத் தாம் தற்கொலை செய்வதை இன்ஸ்டாகிராமில் லைவ் செய்துள்ளார்.

அந்த நபரின் சகோதரி இன்ஸ்டாகிராமில் லைவ் வை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றினர்.

அவருக்குத் தற்கொலைக்கு முயன்ற போது வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.