கொல்கத்தா

ன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் இங்கிலாந்து  அணியும் பாகிஸ்தன அணியும் மோதுகின்றன.

தற்ப்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்  தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதில் மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. நியூசிலாந்து அணி 9 ஆட்டங்களில் ஆடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4வது இடத்தில் உள்ளதால் க்கு அதிக வாய்ப்பு உள்ளது.மேலும் அந்த அணியின் நெட் ரன் ரேட்டும் (+0.743) நல்ல நிலையில் உள்ளது.

இன்று உலகக்கோப்பை தொடரில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

பிறகு மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோத உள்ளன.

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற சூழலில் விளையாட உள்ளது. இங்கிலாந்து அணி இதில் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலும் இன்றி 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற முடியும் என்பதால் அந்த அணியும் வெற்றிக்காக போராடும் எனவே இன்றைய ஆட்டம் மிகவும் விருவிருப்புடன் நடைபெற வாய்ப்புள்ளது.