போர்ட் பிளேயர்

ன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின்  தலைநகர் போர்ட் பிளேர் ஆகும்.

இன்று அதிகாலை சுமார் 5.28 மணி அளவில் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தலைநகருக்குத் தென் கிழக்கே 218 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 4.3 அளவில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல் வரவில்லை.