பெங்களூரு

ன்று பெங்களூருவில் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை  முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நடந்து வருகிறது. இதில்  5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களின் வசதிக்காகப் பெங்களூரு நகரில் இன்று மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பசுமை மற்றும் ஊதா நிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இரவு 11.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ரசிகர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இன்று கப்பன் பார்க் மற்றும் எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒருநாள் செல்லுபடியாகும் காகித டிக்கெட் வினியோகிக்கப்பட உள்ளது. அதன் விலை ரூ.50 ஆகும். அந்த காகித டிக்கெட் மூலம் எந்த ரயில் நிலையங்களுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அத்துடன் திரும்பி வருவதற்கான (ரிட்டன்) காகித டிக்கெட்டையும் முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.