நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் இன்று. இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

நாட்டின் 3வது பிரதமரும், முதல் பெண் பிரதமராகவும் பதவி வகித்தவர் இந்திரா காந்தி. இந்தியாவின்  இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவரான அவரை, அவரது பாதுகாவலர்களே 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணியளவில், தலைநகர் டில்லி  சப்தர்ஜங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து அலுவலகம் செல்ல நடந்து வந்தபோது,  சத்வந்த் சிங், பீண்ட் சிங் என்ற அவரது இரு சீக்கிய  பாதுகாவலர் களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சிக்கு உள்ளாட்கியது மட்டுமின்றி, சீக்கியர்களின் நற்பெயருக்கு வரலாற்றில் கலங்கத்தை ஏற்படுத்தியது.

நவம்பர் ஒன்றாம் நாளன்று அவரது உடல் ஒரு பீரங்கி வண்டியில் டில்லி தெருக்களின் வழியே தீன் மூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டது. நவம்பர் 3ம் நாளன்று அவரது உடல் ராஜ்காட்டுக்கு அருகே தகனம் செய்யப்பட்டது. அவரது மூத்த மகனான ராஜீவ் காந்தி அவருக்கு இறுதிக்கடன்களைச் செய்தார்.

இந்திராகாந்தியின் வாழ்க்கை  குறிப்பு

1917 ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகளாகப் பிறந்தார். சுவிட்ஸ்ர்லாந்தின் பெக்ஸ் பகுதியிலுள்ள எக்கோல் நோவல், ஜெனிவாவிலுள்ள எக்கோல் இண்டர் நேஷனல், பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன் ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல், விஷ்வபாரதி, சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் அவர் கல்வி பயின்றார்.

திருமதி. இந்திரா காந்தி 1964 ஆகஸ்ட் முதல் 1967 பிப்ரவரி வரை மாநிலங்களவை உறப்பினரானார். நான்காவது, ஐந்தாவது, ஆறாவது  பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராப் பணியாற்றினார். மீண்டும் ஏழாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் ரேபரலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறகு 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திர பிரதேசத்தின் மேடக் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். மேடக் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, ரேபரலி தொகுதியை ராஜினாமா செய்தார். 1967 முதல் 1977 வரை காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னார் 1980 ஜனவரி மாதம் மீண்டும் இப்பொறுப்பை ஏற்றார்.

பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர் வாழ்க்கையை ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடாகவே கருதினார். ஆர்வமும் செயல்பாடுகளும் வெவ்வேறு தன்மையை கொண்டிருந்தாலும் இரண்டையும் தனித்தனியாக அவர் பிரித்துப்பார்க்கவில்லை. அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

1972ல் பாரத் ரத்னா, 1972ல் வங்காள தேசத்தின் விடுதலைக்காக மெக்ஸிகன் கழகத்தின் விடுதலைக்கான விருது, ஜ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 2-வது ஆண்டு விருது, 1976ல் நகரி பிரச்சாரினி சபையின் சாகித்தய வச்சாஸ்பதி (ஹிந்தி) ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். 1953ம் ஆண்டு அமெரிக்காவின் தாய்மை விருது (மதர்ஸ் அவார்ட்), சாதுரியம் / செயல்திறனில் சிறந்து விளங்கியதற்காக இத்தாலியின் இஸபெல்லா தி’ எஸ்தே விருது மற்றும் யேல் பல்கலைகழகத்தின் ஹாவ்லண்ட் நினைவு பரிசையும் அவர் வென்றுள்ளார். பிரஞ்ச் பொது மக்கள் கருத்து நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு / வாக்குபதிவின்படி 1967 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் பிரஞ்ச் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட நபராக இருந்தார்.

1971ல் அமெரிக்காவின் சிறப்பு கேலப் வாக்கெடுப்பின்படி திருமதி இந்திரா காந்தி உலகிலேயே மிக அதிக மக்களால் விரும்பப்பட்ட பெண்மனி ஆவார். விலங்குகளின் பாதுகாப்புக்காக, 1971ல் அர்ஜன்டினா சொசைடி அவருக்கு கௌரவ டிப்ளமோ பட்டத்தை அளித்தது.

தி இயர்ஸ் ஆப் ச்லேஞ் (சவால்கள் நிறைந்த ஆண்டுகள்), (1966-69), தி இயர்ஸ் ஆப் எண்டேவர்ஸ் (முயற்சிகள் நிறைந்த ஆண்டுகள், 1969-72), 1975ல் இந்தியா (லண்டன்), 1979ல் ‘இந்தியா’ (லாஸேன்) போன்ற பல்வேறு உரைகளும், எழுத்துகளும் அவரின் பிரபலமான புத்தக வெளியீடுகளாகும்.

இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவிலும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், பர்மா, சீனா, நேபாளம் மற்றும் இலங்கை (ஸ்ரீலங்கா) ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ், ஜெர்மன், பெட்ரல் ரிப்பளிக் ஆப் ஜெர்மன், கயானா, ஹங்கேரி, ஈரான், ஈராக், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அவர் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார்.

அல்ஜிரியா, அர்ஜன்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, செக்கோஸ்லோவாகியா, பொலிவியா எகிப்து நாடுகளுக்கும் திருமதி. காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, ஜப்பான், ஜமயக்கா, கென்யா, மலேசியா, மொரிசியஸ், மெக்ஸிகோ, நெதர்லாண்ட்ஸ், நியூசிலாந்,து, நைஜிரியா, ஓமன், போலாந்த், ரோமனியா, சிங்கப்பூர், சுவிஸ்சர்லாந்த், சிரியா, ஸ்வீடன், டான்ஸானியா, தாய்லாந்த், ட்ரினிடாட் மற்றும் டூபகோ, யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் தலைநகரத்திற்கும் (நியூயார்க்) பயணம் சென்றுள்ளார்.