சென்னை

ன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினமாகும்

குழந்தைகளைத் தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று போலியோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இளம்பிள்ளை வாத நோய் ஆகும்.

இந்த நோய் தாக்கிய குழந்தைகளின் கை அல்லது கால் சூம்பிப் போய் இயக்க முடியாமல் போய் விடும்.

இந்த நோயை தடுக்க அரசு ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து அளிக்கப் படுகிறது.

இன்று (28.01.2018) அன்று தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப் பட உள்ளது.

இந்த தகவல் அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப் பட்டு வருகிறது.

இதை பயன்படுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளித்து குழந்தைகளை  போலியோவில் இருந்து காக்குமாறு பத்திரிகை.காம் பெற்றோர்களைக் கேட்டுக் கொள்கிறது.