இன்று ,25.12.2019 அனுமன் ஜெயந்தி

அனுமன் ஜெயந்தி குறித்த நெட்டிசன் பதிவு

 

மாதங்களில் சிறப்புப் பெற்றது மார்கழி.

திதிகளில் நிறைவானதாகக் கருதப்படுவது அமாவாசை.

அறிவு, ஞானத்தின் அடையாளமாகத் திகழ்வது மூல நட்சத்திரம்.

இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் இந்த நல்ல நாளில் , அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயர்.

அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி.

அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் , சகல மங்களங்களும் உண்டாகும்.

நினைத்த காரியம் கைகூடும்.

துன்பங்கள் விலகும்.

இன்பங்கள் பெருகும்.

“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயு புத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத் ”

ஜெய் ஸ்ரீராம்…!