பாங்காக்

பாங்காக்கில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளது/

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கினால் ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. வரும் 16-ந் தேதி வரை போட்டிகள் நடைபெறும்  நேற்று இந்த போட்டியில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்தது.

ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும் இருந்தது.  இன்றைய 3-வது நாளன்று இந்தியா 2 தங்கம் வென்றுள்ளது.

இன்று ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் 20.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார். தவிரப் பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுத்ரி தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் பந்தய தூரத்தை 9.38 நிமிடங்களில் கடந்தார்.

இவற்றை தவிரப் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஷைலி சிங் 6.54 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.