டில்லி

நாளை நடைபெற உள்ள இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க இன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வர உள்ளார்.

நாளை டில்லியில் நாளை  குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. டில்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும்.

குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இதையொட்டி அவர் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இன்று மதியம் விமானம் மூலம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வரும் மேக்ரான் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். மேலும் அவர் மோடியுடன் சாலை பேரணியிலும் பங்கேற்கிறார்.

ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8.50 மணியளவில் டில்லிக்குப் புறப்பட்டு செல்லும் மேக்ரான் நாளை டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளார்.