டாக்

ன்று லடாக் பகுதியில் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் 3.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று லடாக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 4.01 மணி அளவில் கிஷ்த்வார் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கிஷ்த்வாரில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.