சென்னை

மிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நடத்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.

 

நேற்று தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.  இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். ஆளுநர் உரையைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆயுவுக் குழுக் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் குழு கூட்டத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   இந்த விவாதத்தில் இன்றும் நாளையும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விவாதம் நடத்த உள்ளனர்.  அதன் பிறகு வரும் 24 ஆம் தேதி அன்று முதல்வர் விவாதங்களுக்குப் பதில் அளிக்க உள்ளார்.

மேலும் இன்று அவை தொடங்கியது, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், எழுத்தாளர் கி ராஜநாராய்ணம், துளசி ஐயா வாண்டையார், டி எம் காளியண்ணன், நடிகர் விவேக் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.