சென்னை

ன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தற்போது தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதல்கட்டமாக 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் நேற்று நடைபெற்ற முகாமில் 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாளை முதல் 16ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. மீண்டும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் இன்று வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.