சென்னை

ன்று தமிழகம் முழுவதும் வார இறுதியை முன்னிட்டு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வார இறுதி நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே இன்று மற்றும் 5-ந் தேதி  6-ந் தேதி ஆகிய வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 6 ஆயிரத்து 948 பயணிகள் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர்.

பயணிகள் எந்தவித சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 400 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.