ஸ்ரீஹரிகோட்டா

ன்று சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 முயற்சி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது ‘சந்திரயான்-3’ விண்கலத்தைச் சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன.

அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

‘சந்திரயான் 3’ விண்கலத்தில் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள ‘புரபுல்சன்’ பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்குக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்துப் பொருத்தப்பட்டு உள்ளது.

லேண்டர் பகுதி நிலவில் மெதுவாகத் தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

நேற்று ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. இது முழுமையாக முடிந்ததும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, இன்று பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் உந்துகணை விண்ணில் பாய்கிறது.

இந்தியா நிலவுக்கு அனுப்பப்படும் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, விண்வெளி ஆய்வின் மூலம் நாடு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்  இன்னும் சில மணி நேரங்களில் இந்தியாவின் லட்சிய நிலவுப் பயணம் தொடங்க உள்ளது.