டில்லி

ன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி மோடியின் தலைமையில் பாஜக அமைச்சரவை இரண்டாம் முறையாக பதவி ஏற்றது.   கடந்த இரு ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித விரிவாக்கம் மற்றும் மாற்றங்கள் நடைபெறவில்லை.   இடையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளின் அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்

சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கும் துறை அமைச்சர் தவர்சந்த் கெலாட் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அமைச்சர்களின் பொறுப்புக்களை மற்ற அமைச்சர்களுக்கு குடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில்; இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து யாருக்கு எந்த துறை வழங்கப்படும் என ஊகங்கள் பாஜக தரப்ப்பில் இருந்து  செய்திகளாக வெளியாகி உள்ளன.

அவை பின் வருமாறு :

* 20 மந்திரிகள் புதிதாகப் பதவி ஏற்கக்கூடும்.

* ஏற்கனவே, நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி உள்பட அதிகபட்சம் 11 பேர் இடம்பெற்றிருந்தாலும், விரிவாக்கத்திலும் கூடுதல் இடங்களை இந்த மாநிலம் பிடிக்கக்கூடும்.

*  உ.பி. சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுகிறது. பா.ஜ.க.வுக்கான மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிராமணர், தலித் இனத்தவரின் ஆதரவை நிலைநிறுத்தித் தக்க வைக்கும் வகையில் இந்த இனத்தவருக்கு வாய்ப்பு கிடைக்கும். குர்மி இனத்தைச் சேர்ந்த கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் தலைவர், அனுபிரியா படேல், பா.ஜ.க.வில் பிராமண இனத்தைச் சேர்ந்த அலகாபாத் நாடாளுமன்ற உறுப்பினர். ரீட்டா பகுகுணா ஜோஷி, கான்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்.. சத்யதேவ் பச்சாரி, தலித் இனத்தைச் சேர்ந்த ராம்சங்கர் கத்தேரியா, ராஜ்குமார் சாஹல், கவுசல் கிஷோர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

* ம பி காங்கிரஸ் தலைவராக விளங்கி, பின்னர் பா.ஜ.க.வில் சேர்ந்து, நீண்ட நாட்களாக மத்திய மந்திரி பதவிக்காகக் காத்திருக்கிற இளம்தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்குக் கண்டிப்பாக கேபினட் அமைசர் பதவி கிடைக்கும் எனவும், அவர் டெல்லி விரைந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

* மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவராக விளங்குகிற நாராயண் ரானே, அசாமில் இருந்து சர்வானந்தா சோனாவால் ஆகியோருடைய பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.

* பா.ஜ.க. மூத்த தலைவர்களான பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்), அனில் பலுனி (உத்தரகாண்ட்), சுதன்சு திரிவேதி (உ.பி), அஷ்விணி வைஷ்ணவ் (ஒடிசா), ஜி.வி.எல்.நரசிம்மராவ் (ஆந்திரா) உள்ளிட்டோருக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

* பீகார் மாநில ஆட்சியை பா.ஜ.க.வுடன் பகிர்ந்து கொண்டுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சர் பதவிக்கு அந்த கட்சியின் தலைவர் ஆர்.சி.பி.சிங் மற்றும் சந்தோஷ் குஷ்வகா ஆகியோருடைய பெயர்கள் அடிபடுகின்றன.

* பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷில் மோடி (பா.ஜ.க.) அமைச்சர் ஆகிறார்

* ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியில் இருந்து பிரிந்து வெளியே வந்துள்ள அணியின் தலைவரான பசுபதி பராசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்

* மேற்கு வங்கத்தில், கட்சியைப் பலப்படுத்த ஏதுவாக அம் மாநிலத்துக்கு மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தில் இடம் தரப்படும் என தெரிகிறது. அந்த கட்சியின் லாக்கெட் பானர்ஜி மத்திய அமைச்சர் ஆவார் என எதிர்பார்ப்பு உள்ளது. தவிர மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் பெயரும் மந்திரி பதவிக்கு அடிபடுகிறது.

பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளில் ஐக்கிய ஜனதாதளம், அப்னா தளம் உள்ளிட்டவற்றுக்குப் புதிதாக வாய்ப்பு கிடைத்தாலும், அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் எதுவும் இல்லை.