சென்னை
இன்று அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 23.12.2024ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும் அதே நபர் அந்த மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக பல்கலைக்கழக உள் புகார் விசாரணை குழுவின் ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொண்டு வந்த கோட்டூர்புரம் போலீசார், அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்துள்ளனர். ஞானசேகரன் மீது ஏற்கனவே 2011ம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் இதேபோன்ற ஒரு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருவதால் நாளை அட்டவணைப்படி தேர்வு நடக்கும். விடுமுறை அல்ல என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]