சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 2,467 பேரும் கோவையில் 3,332 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 26,513 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 21,23,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 24,722 பேர் உயிர் இழந்து 18,02,176 பேர் குணம் அடைந்து தற்போது 2,96,131 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 2,467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,06,937 பேர் பாதிக்கப்பட்டு 7,145 பேர் உயிர் இழந்து 4,67,723 பேர் குணம் அடைந்து தற்போது 32,069 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 3,332 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உ ள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 1,73,842 பேர் பாதிக்கப்பட்டு 1,307 பேர் உயிர் இழந்து 1,31,965 பேர் குணம் அடைந்து தற்போது 40,570 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,41,707 பேர் பாதிக்கப்பட்டு 1,888 பேர் உயிர் இழந்து 1,29,928 பேர் குணம் அடைந்து தற்போது 9,891 பேர் சிகிச்சையில் உள்ளனர்.