சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 2,689 பேரும் கோவையில் 3,537 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 28,864 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,68,580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 23,754 பேர் உயிர் இழந்து 17,39,280 பேர் குணம் அடைந்து தற்போது 3,05,546 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 2,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,01,930 பேர் பாதிக்கப்பட்டு 7,008 பேர் உயிர் இழந்து 4,59,499 பேர் குணம் அடைந்து தற்போது 35,423 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 3,537 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில்  உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 1,67,003 பேர் பாதிக்கப்பட்டு 1,168 பேர் உயிர் இழந்து 1,20,258 பேர் குணம் அடைந்து தற்போது 09047,336 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,39,263 பேர் பாதிக்கப்பட்டு 1,789 பேர் உயிர் இழந்து 1,25,981 பேர் குணம் அடைந்து தற்போது 11,493 பேர் சிகிச்சையில் உள்ளனர்.