புலிவெந்துலா.

ன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேட்ப்மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வரும் மே 13 ஆம் தேதி அன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி, 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கட்ந்த 18 ஆம் தேதி இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கியது. பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் கடப்பா தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இருந்தனர்.

ஏற்கனவே கடந்த 22ம் தேதி முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சார்பாக புலிவெந்துலா தொகுதியைச் சேர்ந்த உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.