சென்னை

மிழகத்தில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,35,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,01,165 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,54,96,026 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 27,35,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,612 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 708 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,91,054 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 7,723 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,59,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,628 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 106 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,49,531 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,305 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 102 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,51,603 பேர் பாதிக்கப்பட்டு 2,488 பேர் உயிர் இழந்து 2,47,936 பேர் குணம் அடைந்து தற்போது 1,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,468 பேர் பாதிக்கப்பட்டு 2,538 பேர் உயிர் இழந்து 1,71,330 பேர் குணம் அடைந்து தற்போது 600 பேர் சிகிச்சையில் உள்ளனர்.