சென்னை

மிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,38,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,05,974 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,60,13,280 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் அமீரகத்தில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.   இதுவரை 27,38,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,667 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 679 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,94,509 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 7,407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,60,080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 8,638 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 126 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,50,100 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 102 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,52,129 பேர் பாதிக்கப்பட்டு 2,493 பேர் உயிர் இழந்து 2,48,500 பேர் குணம் அடைந்து தற்போது 1,136 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,697 பேர் பாதிக்கப்பட்டு 2,544 பேர் உயிர் இழந்து 1,71,595 பேர் குணம் அடைந்து தற்போது 558 பேர் சிகிச்சையில் உள்ளனர்.