சென்னை

மிழகத்தில் இன்று 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,44,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,00,927 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,70,27,644 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 5 பேர் மற்றும் ஒருவர் வந்துள்ளனர்.   இதுவரை 27,44,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,744 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 663 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,01,336 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 6,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,61,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,647 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 124 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,51,420 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 88 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,53,064 பேர் பாதிக்கப்பட்டு 2,504 பேர் உயிர் இழந்து 2,49,544 பேர் குணம் அடைந்து தற்போது 1,012 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,75,172 பேர் பாதிக்கப்பட்டு 2,546 பேர் உயிர் இழந்து 1,72,147 பேர் குணம் அடைந்து தற்போது 479 பேர் சிகிச்சையில் உள்ளனர்.